Tuesday 24 July 2018

பாலியல் பலாத்காரம் - வேண்டும் மரண தண்டனை

          தினந்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய செய்திகளில்லாமல் செய்தித்தாள்கள் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மிக முக்கியமானது பாலியல் பலாத்காரம். காலம் முழுவதும் அவளின் நினைவுகளில் வடுவாகப் படர்ந்திருக்கும். சமீப காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க சட்டம் முதல் ஆண்களின் மனோநிலை வரை மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமானது.

மத்திய அரசின் சட்ட திருத்தம்

          பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தண்டனையைக் கடுமையாக்க, மத்திய அரசு 'இந்தியக் குற்றவியல் சட்ட திருத்த மசோதா 2018' -இனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதிலுள்ள முக்கியப் பிரிவுகள் பின்வருமாறு:
  • பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்குக் குறைந்தபட்சமாக வழங்கப்பட்டு வந்த 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையானது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை.
  • 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்தால் குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனை.
  • பாலியல் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு ஜாமீன் வழங்கப்படாது.
  • பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மேல் முறையீட்டுக்குச் சென்றால் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 

வேண்டும் மரண தண்டனை

          பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரக் குற்றங்களை வயதுவாரியாகப் பிரித்து தண்டனை வழங்குவது தவறு. பாலியல் வன்கொடுமை என்பது குழந்தைக்கு நடந்தாலும் சரி, பேரிளம் பெண்ணிற்கு நடந்தாலும் சரி, தண்டனையென்பது மரண தண்டனையாகத்தான் இருக்க வேண்டும். இரக்கமற்ற முறையில் பெண்களைச் சீரழிக்கும் மிருகங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறு. தவறு என்று தெரிந்தும் செய்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது தண்டனைதானே தவிர மன்னிப்பல்ல. பெண்களைச் சரியாக ஆடை அணியச் சொல்லும் முன், நம் கண்களும் எண்ணங்களும் சரியாக உள்ளனவா என்பதனை பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண் அரைக்கால் சட்டையுடன் நடந்தால் சவுகரியம் எனவும், பெண் அரைக்கால் சட்டையுடன் நடந்தால் ஆபாசம் எனவும் தோன்றினால், மாற வேண்டியது பெண்களின் ஆடையல்ல. பார்ப்பவரின் கண்களும் எண்ணங்களுமே!

2 comments:

  1. sattangalai thiruthalamaananl pen yendral ivadivathilthan irukka vendum yenru varai murai irukkirathu. penkal; nalla udai aninthu mikapperiya munnetrangali adaiya villaiya ippouluthu yenna intha udai mattram yen kalachara seer kedu avarkal uduthum aadaikalai kurai soll villai, aadai uduthum baaniyai matrikkollalam aanukku pen yeppoluthum samamaka mudiyathu.................

    ReplyDelete
    Replies
    1. பெண் என்றால் இவ்வடிவத்தில், இம்முறையில்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் பெண்ணை உடைமையாக நினைப்போர் வகுத்த நியதிகள். இந்த நியதிகளையெல்லாம் எமது புதுமைப் பெண்கள் உடைத்தெறிந்து வருகின்றனர். "ஆணுக்கிங்கே பெண் சரிநிகர். காண்!" என முழங்குகின்றனர். ஆணுக்குப் பெண் எப்போதும் சமம்!

      Delete